Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ் புத்தாண்டு! பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது!

Flower
, வியாழன், 13 ஏப்ரல் 2023 (09:01 IST)
நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

நாளை சித்திரை மாதம் முதல் நாள் சுபகிருது தமிழ் வருடம் முடிந்து சோபகிருது தமிழ் வருடம் தொடங்குகிறது. தமிழ் புத்தாண்டில் மக்கள் வீடுகளை சுத்தம் செய்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம். நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்துள்ளதால் பூக்களில் விலையும் அதிகரித்துள்ளது.

குமரி மாவட்டம் தோவாளை பூ சந்தையில் நேற்று வரை கிலோ ரூ.350க்கு விற்கப்பட்டு வந்த மல்லிகை பூ இன்று ரூ.750 ஆக உயர்ந்துள்ளது. பிச்சிப்பூவும் ரூ.550ல் இருந்து ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது. குமரி மட்டுமல்லாமல் மதுரை, திருச்சி என அனைத்து பகுதிகளிலும் மல்லிகை, அரளிப்பூ, வெள்ளை செவ்வந்தி, மரிக்கொழுந்து என பல பூக்கள் விலை உயர்ந்துள்ளன.

தமிழ் புத்தாண்டையொட்டி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதும், விலை கூடியுள்ளதும் பூ வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு; 2 தமிழர்கள் பலி!