Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணைகள் திறப்பு: தமிழகத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (21:51 IST)
கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அந்த மாநிலத்தின் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 
கபினி அணையில் இருந்து 70,000 கன அடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கன அடி என்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர் திறப்பு 25,000 கன அடியில் இருந்து 30,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
கேரளாவில் கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக முல்லைப்பெரியார் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. நீர் திறப்பு அதிகரிப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, தஞ்சை, சேலம், ஈரோடு, திருச்சி மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இழப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments