Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (15:19 IST)
கே.ஆர்.பி அணையின் தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திருப்பி விடப்பட்டதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 

 
கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் தன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணைக்கு 2 ஆயிரத்து 648 கன அடி நீர் வருகிறது. இன்று கால நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.50 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி ஆகும்.
 
கே.ஆர்.பி ஆணையில் இருந்து தண்ணீரை அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 
மேலும் தாழ்வான பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும் என்றும்; ஆற்றை கடக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனம் தனிநாடு அங்கீகாரம்! அதிகரிக்கும் ஆதரவால் அதிர்ச்சியில் இஸ்ரேல்!

இனி சாதி ஊர்வலங்களுக்கு தடை.. சாதி ஒழிப்பில் களமிறங்கிய உத்தர பிரதேசம்!

ஹனுமான் சிலை ஒரு பொய்யான இந்து கடவுளின் சிலை.. டிரம்ப் கட்சி பிரமுகரின் சர்ச்சையான கருத்து..!

பாகிஸ்தான் பிரதமரை திடீரென சந்திக்கும் டிரம்ப்.. முக்கிய பேச்சுவார்த்தையா?

மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ 2027ஆம் ஆண்டு தான் இயங்குமா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments