Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை செய்ய மறுத்ததால்; பெண்ணின் மூக்கை வெட்டிய கொடூரம்!!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (14:50 IST)
மத்தியப்பிரேதசத்தில் வேலை செய்ய மறுத்ததால் தலித் பெண்ணின் மூக்கு வெட்டபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மத்தியப்பிரேதசத்தில் உள்ள ராஸா கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த  ஜானகி பாய் அவரது கணவர் ராகவேந்தராவுடன் நரேந்திர சிங் என்பவருடைய நிலத்தில் வேலை பார்த்து வந்தார். 
 
இந்நிலையில் நரேந்திர சிங், ஜான்கி பாயை நிலத்திற்கு பூச்சி மருந்து தெளிக்குமாறு கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஜானகி மற்றும் அவரது கணவரை தாக்கியுள்ளனர்.
 
இது குறித்து ஜானகி போலீசில் புகார் அளிக்க சென்ற போது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போதுதான் நரேந்திர சிங் கோடாரியால் ஜானகியின் முகத்தில் தாக்கியது பொது அவரது மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. 
 
இதன் பின்னர் மத்தியப்பிரேதச மாநிலம் மகளிர் அமைப்பின் குறை தீர்க்கும் முகாமில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதவு செய்து தலைமறைவாகியுள்ள நரேந்திர சிங்கை தேடி வருகின்றனர்.
 

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments