Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: அனைத்து அருவிகளில் குளிக்கத் தடை.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி..!

குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: அனைத்து அருவிகளில் குளிக்கத் தடை.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி..!

Siva

, திங்கள், 15 ஜூலை 2024 (11:16 IST)
குற்றால அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அடுத்து சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதை அடுத்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பெய்ததை அடுத்து அதிக அளவு தண்ணீர் வருவதாகவும், இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அருவிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை அடுத்து பாதுகாப்பை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அருவியில் தண்ணீர் குறைந்த பிறகு மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் தண்ணீர் நன்றாக வருகிறது என்ற கேள்விப்பட்டு வந்த சுற்றுலா பயணிகளுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா பயணிகள் பாராட்டு வருகின்றனர்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம், வெள்ளி விலை இன்று திடீர் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?