Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மாவட்ட ஆட்சியரின் வெள்ள அபாய எச்சரிக்கை..!

Mahendran
வெள்ளி, 13 டிசம்பர் 2024 (11:52 IST)
தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி ஆகிய அணைகளில் இருந்து  உபரி நீர் அதிகளவு தண்ணீா் வெளியேற்றப்படுவதால் தாமிரவருணியில் உள்ள மருதூா் அணைக்கட்டுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கன அடி தண்ணீா் வெள்ளிக்கிழமை(டிச.13) வந்து கொண்டிருக்கிறது. 
 
மேலும்  கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்தத் தண்ணீா் மருதூா் மற்றும்  ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், அகரம், ஆழ்வாா்திருநகரி, ஆத்தூா், முக்காணி, புன்னக்காயல் வழியாக கடலில் கலக்கும்.  
 
எனவே, பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம். பொதுப்பணித் துறை, காவல் துறை வருவாய்த் துறையினா், உள்ளூா் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்தியை அறிவித்து வருகின்றனா். ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள், தேவைப்பட்டால் நிவாரண முகாம்களுக்கு வந்து தங்குமாறும், மக்கள் யாரும் தாமிரவருணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
 
மேலும், மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளிலும் வெள்ள நீர்வரத்து குறித்து மிகவும் உன்னிப்பாக அனைத்து நிலை அலுவலர்களாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளா
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீர் நிலவரம் எப்படி இருக்கு? அமித்ஷாவிடம் கேட்டறிந்த ராகுல் காந்தி..!

விஜய், சீமான், அன்புமணி, பிரேமல்தா கூட்டணி தான் 3வது அணியா? அதிமுக - திமுக கூட்டணிக்கு சிம்மசொப்பனம்?

ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்.. கூடுதல் விமானங்கள் ஏற்பாடு..!

இந்த வாரத்தில் இன்னும் ஒரு நல்ல நாள்.. பங்குச்சந்தை தொடர் ஏற்றம்..!

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. மீண்டும் ரூ.72000 வந்தது ஒரு சவரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments