Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்.. மதுரையில் பரபரப்பு..!

தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்.. மதுரையில் பரபரப்பு..!

Siva

, வெள்ளி, 25 அக்டோபர் 2024 (07:32 IST)
மதுரையில் பெய்த கனமழை காரணமாக, இரண்டு விமானங்கள் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக மதுரையில் கனமழை பெய்து வருவதால், மதுரை நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக மதுரையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து மதுரை வந்த இரண்டு இண்டிகோ விமானங்கள் மழை காரணமாக தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், சில நிமிடங்கள் அந்த விமானங்கள் வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தன.

இந்த நிலையில், ஒரு விமானம் தேனி அருகே வட்டமடித்துக் கொண்டிருந்ததோடு, இன்னொரு விமானம் திருமங்கலம் அருகே வட்டமடித்துக் கொண்டிருந்தது. பின்னர், சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்த விமானங்கள் மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரையில் இரு விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தது, அந்த பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயணியுடன் தகராறு.. ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த நடத்துனர்..!