தமிழகத்தில் மேலும் ஐவருக்கு கொரோனா: அமைச்சர் விஜயபாஸ்கர் டுவீட்

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (08:01 IST)
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
 
அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள தகவலின்படி யார் யாருக்கு புதிதாக கொரோனா தொற்று இருக்கின்றது என்பதைப் பார்ப்போம்
 
1. சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் கன்னியாகுமரியை சேர்ந்த 35 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
 
2. சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த 61 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
 
3.கன்னியாகுமரியை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
 
4. சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த 85 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
5. சென்னை மகாபலிபுரம் சாலையில் உள்ள கழிப்பட்டூர் என்ற பகுதியை சேர்ந்த 54 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
 
தமிழகத்தில் ஏற்கனவே 124 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஐவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளியும் திடீரென ரூ.13000 குறைந்ததால் பரபரப்பு..!

ஒரே சமயத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. கனமழை எச்சரிக்கை..!

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எல்லாம் எனக்கு ஒரு நிமிட வேலை: டிரம்ப்

ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்து கொண்ட அரசு ஊழியர் சஸ்பெண்ட்.. அரசின் அதிரடி நடவடிக்கை..!

அல்வாவும் ஒரு உணவு தான்.. தேவைப்படும் நேரத்தில் முதல்வர் அதையும் பரிமாறுவார்: சேகர்பாபு

அடுத்த கட்டுரையில்
Show comments