Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திலும் ஐந்து துணை முதல்வர்கள்! ஓபிஎஸ்-ஐ டம்மியாக்க ஈபிஎஸ் முடிவா?

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (08:01 IST)
இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஆந்திர மாநிலத்தில் ஐந்து துணை முதல்வர்கள் பதவியேற்றுள்ள நிலையில் தமிழகத்திலும் ஐந்து துணை முதல்வர்கள் பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே அதிமுக வேட்பாளரான தனது மகன் ரவீந்திரநாத் குமாரை அமைச்சராக்கி அழகு பார்க்க துணை முதல்வர் ஓபிஎஸ் பெரும் முயற்சி செய்தார். ஆனால் அவரது முயற்சி ஈபிஎஸ் ஆதரவாளர்களால் முறியடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது
 
இதனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் பனிப்போர் உச்சகட்டத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஓபிஎஸ் துணை முதல்வர் பதவியை டம்மியாக்க ஈபிஎஸ் முடிவு செய்திருப்பதாகவும், ஆந்திராவை போலவே தமிழகத்திலும் ஐந்து துணை முதல்வர்கள் நியமனம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகவும் அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஒற்றைத்தலைமை கேட்டு குரல் கொடுப்பவர்களுக்கு துணை முதல்வர்கள் பதவி கொடுத்து அதிருப்தியாளர்களை திருப்தி செய்வதுடன்  ஓபிஎஸ் பதவியையும் டம்மியாக்குவது என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
அதிமுக ஆட்சியை கவிழ்க்க ஒருபுறம் பாஜகவும், இன்னொரு புறம் திமுகவும் திட்டமிட்டு வரும் நிலையில் உள்கட்சியிலேயே ஒற்றுமை இல்லாததால் அதிமுகவின் எதிர்காலம் என்ன ஆகுமோ? என அக்கட்சியின் உண்மையான தொண்டர்கள் பெரும் கவலையில் உள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments