Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திலும் ஐந்து துணை முதல்வர்கள்! ஓபிஎஸ்-ஐ டம்மியாக்க ஈபிஎஸ் முடிவா?

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (08:01 IST)
இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஆந்திர மாநிலத்தில் ஐந்து துணை முதல்வர்கள் பதவியேற்றுள்ள நிலையில் தமிழகத்திலும் ஐந்து துணை முதல்வர்கள் பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே அதிமுக வேட்பாளரான தனது மகன் ரவீந்திரநாத் குமாரை அமைச்சராக்கி அழகு பார்க்க துணை முதல்வர் ஓபிஎஸ் பெரும் முயற்சி செய்தார். ஆனால் அவரது முயற்சி ஈபிஎஸ் ஆதரவாளர்களால் முறியடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது
 
இதனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் பனிப்போர் உச்சகட்டத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஓபிஎஸ் துணை முதல்வர் பதவியை டம்மியாக்க ஈபிஎஸ் முடிவு செய்திருப்பதாகவும், ஆந்திராவை போலவே தமிழகத்திலும் ஐந்து துணை முதல்வர்கள் நியமனம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகவும் அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஒற்றைத்தலைமை கேட்டு குரல் கொடுப்பவர்களுக்கு துணை முதல்வர்கள் பதவி கொடுத்து அதிருப்தியாளர்களை திருப்தி செய்வதுடன்  ஓபிஎஸ் பதவியையும் டம்மியாக்குவது என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
அதிமுக ஆட்சியை கவிழ்க்க ஒருபுறம் பாஜகவும், இன்னொரு புறம் திமுகவும் திட்டமிட்டு வரும் நிலையில் உள்கட்சியிலேயே ஒற்றுமை இல்லாததால் அதிமுகவின் எதிர்காலம் என்ன ஆகுமோ? என அக்கட்சியின் உண்மையான தொண்டர்கள் பெரும் கவலையில் உள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments