Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சை நிறமாக மாறிய கடல்; செத்து மிதக்கும் மீன்கள்! – ராமநாதபுரத்தில் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (11:18 IST)
ராமநாதபுரம் கடல் பகுதி திடீரென பச்சை நிறமாக மாறிய நிலையில் மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை ஓர பகுதிகளில் சில நாட்களாக கடல் பச்சை நிறத்தில் காணப்பட்டு வருகிறது. பச்சை நிற பாசிகள் பலவும் கரை ஒதுங்கிய நிலையில் நேற்று முதலாக கடற்கரை ஓரமாக மீன்கள் பல இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. அதேபோல பாம்பன் பகுதியில் டால்பின் ஒன்று இறந்து கரை ஒதுங்கியுள்ளது.

இதுகுறித்து அறிந்த மீன்வள ஆராய்ச்சியாளர்கள் மாதிரிகளை கொண்டு சென்று ஆய்வு செய்துள்ளனர். பிறகு விளக்கமளித்துள்ள அவர்கள் “ஆண்டுதோறும் இந்த கடல்பகுதியில் செப்டம்பர், அக்டோபர் வாக்கில் பூக்கோரை என்னும் கடல்பாசிகள் படர்வது வழக்கம். இதனால் கடல் பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. இந்த பாசிகளை தின்றதால் மீன்கள் செதில்கள் அடைக்கப்பட்டு இறந்திருக்கலாம். பெரும்பாலும் ஓரா, சூடை ரக மீன்களே இறந்துள்ளன” என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments