Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீனவர்கள் வங்கக்கடல் ஒட்டிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை !

மீனவர்கள் வங்கக்கடல் ஒட்டிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை !
, செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (16:08 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில், திருச்சி, பெரம்பலூர், மதுரை, சேலம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சென்னையை பொருத்தவரை நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோரம் மற்றும் அதன் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்  சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசுக் கொண்டிருப்பதால்,  ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கும், மேற்வங்க மாநிலம, ஒடிசாவையொட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவிற்கு 1.5 பில்லியன் டாலர்கள்! – ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!