Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீன் வரத்து அதிகரிப்பு; மலிவாய் கிடைத்த மீன்கள்! – மகிழ்ச்சியில் மக்கள்!

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2022 (10:16 IST)
சென்னை காசிமேடு சந்தையில் மீன் வரத்து அதிகரித்துள்ளதால் விலையும் மிக குறைந்துள்ளது.

மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த வாரங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். எனினும் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் மீன் விலை அதிகமாக இருந்தது. இன்று விடுமுறை நாள் என்பதால் மக்கள் பலரும் மீன் வாங்க காசிமேடு சந்தையில் குவிந்திருந்தனர்.

அதேசமயம் இன்று மீன்கள் வரத்தும் அதிகமாக உள்ளதால் விலையும் கனிசமாக குறைந்துள்ளது. நெத்திலி, வெள்ளை ஊடான் உள்ளிட்ட மீன்கள் கிலோ ரூ.100க்கு விற்பனையாகியுள்ளன. கடம்மா ரூ.280க்கும், பாறை ரூ.300க்கும், சங்கரா ரூ.300க்கும் விற்பனையாகியுள்ளது. வஞ்சிரம் கிலோ ரூ.1100க்கு விற்பனையாகியுள்ளது. நண்டு, இறால் கிலோ ரூ.350க்கு விற்பனையாகியுள்ளது. விடுமுறை நாளில் மீன் விலை குறைந்துள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments