Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமையும் வகுப்பு: கல்வி இயக்குனர் உத்தரவு

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (15:07 IST)
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்கள், மாணவிகளுக்கு மட்டும் சனிக்கிழமையும் வகுப்பு நடத்தப்படும் என கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 
2022 - 2023 ஆம் ஆண்டின் கல்வி ஆண்டில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை தாமதமானதால் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் கட்டாயம் வகுப்பு நடத்தப்பட வேண்டும் என கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
2023 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதிக்குள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை நடத்தி முடித்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் சனிக்கிழமை வகுப்பு உண்டு என்ற அறிவிப்பு கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments