Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி தேர்வெழுதி ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு - தமிழகத்தில் இதுவே முதல் முறை

Webdunia
ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (16:39 IST)
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்து ஐஏஎஸ் அதிகாரியாக பெண் அதிகாரி ஒருவர் பதவி உயர்வு பெற்றுள்ளது தமிழகத்தில் முதல் முறை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  ’
 
தமிழகத்தை சேர்ந்த தீயணைப்புத்துறை இணை இயக்குனராக இருந்த பிரியா ரவிச்சந்திரன் என்பவர் ஐஏஎஸ் அதிகாரி பதவி உயர்வு அடைந்துள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு குரூப் 1 டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் பிரியா ரவிச்சந்திரன். 
 
இவர் படிப்படியாக பதவி உயர்வு அடைந்து தீயணைப்புத்துறையின் இணை இயக்குனராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் இவரை ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்த்த தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அவரை ஐஏஎஸ் அதிகாரியாக பதவி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது 
 
தீயணைப்பு துறையில் இருந்து ஒருவர் முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றிருப்பது தமிழகத்தில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments