செங்கல்பட்டு அருகே தீவிபத்து; புகைமூட்டமான நெடுஞ்சாலை; வாகன ஓட்டிகள் பாதிப்பு

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (16:00 IST)
செங்கலபட்டு அருகே உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தால் திருச்சி - சென்னை நெடுஞ்சாலை புகை மூட்டம்  அதிகமாகி வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு சுங்க சாவடி அருகே உள்ள வனப்பகுதிகளில் பயங்கரமான காட்டுத்தீ பற்றியது. இதானல் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை புகை மூட்டமாக காணப்பட்டது. 
 
புகை மூட்டம் ஏற்பட்ட காரணத்தால் சாலை வாகனங்கள் செல்வது தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் இந்த காட்டுத்தீ வெயிலில் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
 
சமீபத்தில் தேனி மாவட்டம் குரங்கணி மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 18பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி தான் பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய பலம்.. பிஆர்எஸ் கட்சி விமர்சனம்..!

டிக்கெட் கவுன்ட்டர்களில் தட்கல் முன்பதிவு செய்தாலும் ஓடிபி கட்டாயம்: புதிய நடைமுறை அறிமுகம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 13 இந்து அமைப்பினர் கைது

முற்றிலும் வலு குறைந்தது டிட்வா புயல்.. சென்னையில் இன்று வெயில் அடித்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

3 நாள் சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments