Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போத்தீஸ் குடோனில் தீ விபத்து: ரூ.10 மதிப்புள்ள் பொருட்கள் சாம்பல்

Webdunia
ஞாயிறு, 4 மார்ச் 2018 (12:57 IST)
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கிளைகளை கொண்ட போத்தீஸ் ஜவுளி நிறுவனத்தின் குடோன் ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் உள்ளது. இந்த குடோனில் போத்தீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பழையதுணிகள் சேமித்து வைக்கப்படும். இந்த நிலையில் நேற்றிரவு இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக குடோனுக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ மளமளவென பரவி ஏராளமான துணிகள் தீக்கிரையாகிவிட்டதாக் கூறப்படுகிறது.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் சாம்பலாகிவிட்டதாகவும் தீயணைப்பு துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments