Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்டுமன்னார்குடியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து - 9 பேர் பலி!

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (14:02 IST)
காட்டுமன்னார்குடி அருகே குருங்குடி பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில்  பகுதிக்கு அருகே குருங்குடி எனும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள காந்திமதி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் அங்கு வேலை செய்துகொண்டு இருந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதில் காந்திமதி உட்பட, மலர்கொடி, சித்ரா, லதா, ராசாத்தி ஆகிய 5 பெண்களும் அடக்கம். மேலும் சிலர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்மந்தமாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments