Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பயங்கர தீவிபத்து: பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (18:57 IST)
சென்னை ராயபுரத்தில் தனியாருக்கு சொந்தமான குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை ராயபுரத்தில் லோட்டஸ் ராமசாமி தெருவில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்றில் மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்படும், சூட்கேஸ் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது
 
இந்நிலையில் இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்படதால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில் இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒருசில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் அந்த குடோனில் வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. சேத மதிப்பு கணக்கிடப்பட்டு வருவதாகவும், தீ விபத்து எதனால் நடந்தது என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments