Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலம் மூலிகை கடைகளில் திடீர் தீ விபத்து

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (14:13 IST)
குற்றாலத்தில் குற்றாலநாதர் கோயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த மூலிகை பொருட்கள் கடைகளில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

 
நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையிலும் பொதுமக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வந்து செல்கின்றனர். குற்றால சீசனுக்காக குற்றாலநாதர் கோயில் அருகில் நூற்றுக்கணக்கான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 
 
கோயிலின் வடக்கு சன்னதி தெருவில் உள்ள கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் 4 கடைகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. சுமார் 3 மணி நேரம் போராடி தியணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 
 
இந்த தீ விபத்தில் கடைகளில் இருந்த மூலிகைகள் அனைத்து தீயில் சாம்பலாகின. தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் சேதமடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளன. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சீசன் முடிவடைந்ததால் பல கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதானால் பெரிய அளவிலான சேதம் இல்லாமல் போனது. மேலும் கோயிலின் வடக்கு சன்னதி கதவு அடைக்கப்பட்டு இருந்ததால் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருவதற்கு தாமதம் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments