Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலம் மூலிகை கடைகளில் திடீர் தீ விபத்து

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (14:13 IST)
குற்றாலத்தில் குற்றாலநாதர் கோயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த மூலிகை பொருட்கள் கடைகளில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

 
நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையிலும் பொதுமக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வந்து செல்கின்றனர். குற்றால சீசனுக்காக குற்றாலநாதர் கோயில் அருகில் நூற்றுக்கணக்கான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 
 
கோயிலின் வடக்கு சன்னதி தெருவில் உள்ள கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் 4 கடைகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. சுமார் 3 மணி நேரம் போராடி தியணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 
 
இந்த தீ விபத்தில் கடைகளில் இருந்த மூலிகைகள் அனைத்து தீயில் சாம்பலாகின. தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் சேதமடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளன. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சீசன் முடிவடைந்ததால் பல கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதானால் பெரிய அளவிலான சேதம் இல்லாமல் போனது. மேலும் கோயிலின் வடக்கு சன்னதி கதவு அடைக்கப்பட்டு இருந்ததால் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருவதற்கு தாமதம் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹார்ன் சவுண்டில் மிருதங்கம், புல்லாங்குழல் இசை..! மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய சட்டம்!

முதல்முறையாக தமிழகத்தில் தொங்கு சட்டசபை.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

ஏப்ரல் 28 வரை தமிழ்நாட்டில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

10G இண்டர்நெட் அறிமுகம் செய்த சீனா.. இந்தியாவில் இதெல்லாம் எப்போது வரும்?

கூகுள் போலவே டூப்ளிகேட் மெயில் அனுப்பும் ஹேக்கர்கள்.. க்ளிக் செய்தால் மொத்த பணமும் அம்போ..!

அடுத்த கட்டுரையில்
Show comments