Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி கரூரில் ஆர்பாட்டம்

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2019 (18:26 IST)
கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்.சுற்றுச்சூழல் போராளி முகிலன் கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மணல் குவாரிகளை எதிர்த்து கடுமையான போராட்டங்களை நடத்தினார்.இதனால் பல குவாரிகள் மூடப்பட்டது. 

இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான போராட்டங்களை நடத்தினார் இந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக பல ஆதாரங்களை வீடியோவாக கடந்த 13 தினங்களுக்கு முன்னர் முகிலன் சென்னையில் செய்தியாளர்களிடம் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

அதன்பிறகு முகிலன் சென்னையிலிருந்து மதுரை செல்வதற்காக ரயில் நிலையம் வந்தார்.  அதன்பிறகு முகிலன் மதுரைக்கும் வரவில்லை வேறு எங்கும் செல்லவில்லை திடீரென்று காணாமல் போய்விட்டார். முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி பல்வேறு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 
 
கரூர் மாவட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன்  கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து தர கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

தொடர்புடைய செய்திகள்

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments