Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாமக்கல்லில் உயிரிழந்த இரு மாணவிகளின் குடும்பத்திற்கு நிதி உதவி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (22:19 IST)
நாமக்கல் மாவட்டத்தில்  நீச்சல் பழகச் சென்ற போது, உயிரிழந்த இரு மாணவிகளின் குடும்பத்திற்கும் தலா 2 லட்சம்  முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் , வட்ட நாச்சம்பட்டி கிராமத்தில் உள்ள அத்திப்பழகனூரில் வசித்து வருபவர் கணேசன். இவரது மனைவி வெண்ணியா. இந்த தம்பதியின் மகளான ஜனனியும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கண்ணன் – தமிழ்ச்ச்சேல்வி  தம்பதியின் மகளுமான ரச்சனாவும் பள்ளியில் ஒன்றாகப் படித்து வந்தனர்.

இன்று அவர்கள் இருவரும் பள்ளிக்கு அருகிலுள்ள மான் குட்டையில் நீச்சம் பழகச் சென்றனர், ஆனால் துரதிஷ்டவசமாக  நீரில் மூழ்கி பலியாகினர்.

இரண்டு மாணவிகள் இறந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் ஸ்டாலின் இரு மாணவிகள் மரணத்திறு இரு குடும்பத்தினருக்கு  இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்,  உயிரிழந்த இரு மாணவிகளின் குடும்பத்திற்கும் தலா 2 லட்சம்  முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments