Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ-பாஸ் மீது மேலும் சில தளர்வுகள்: தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (12:39 IST)
இ-பாஸ் பெறுவதற்கான நடைமுறையில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணங்களால் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும், வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வரவும் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இந்நிலையில் இபாஸ் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் மக்கள் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் விதமாக தளர்வுகள் வழங்கப்பட்டன.   
 
இதனிடையே மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மக்கள் மாநிலங்களுக்கு இடையிலோ அல்லது மாவட்டங்களுக்கு இடையிலோ பயணிக்க மாநில அரசுகள் எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.   
 
இந்நிலையில். இபாஸ் பெறுவதற்கான நடைமுறையில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பிற மாநிலங்களில் இருந்து வணிக ரீதியாக தமிழகம் வருவோருக்கு உடனடி இபாஸ் வழங்கப்படும். 
 
அதோடு தமிழகத்திற்கு வந்த நாளிலிருந்து 3 நாட்களுக்குள் புறப்படுவதாக இருந்தால் தனிமைப்படுத்துதல் கிடையாது. தொழில்துறையினர், ஐ.டி ஊழியர்கள், திரைத்துறையினர், சட்டப் பணிகளுக்காக வருவோருக்கு இவை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள்.. அமெரிக்காவில் இருந்து கிளம்பும் 2வது விமானம்..!

பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்.. என்னுடைய சிறந்த நண்பர்.. டிரம்ப் புகழாரம்..!

சென்னையில் தேவா இசை நிகழ்ச்சி: அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்..!

மும்பை தாக்குதல் குற்றவாளி இந்தியாவிடம் ஒப்படைப்பு.. அமெரிக்க அரசு ஒப்புதல்..!

இந்தியா விதிக்கும் வரி, இந்தியா மீதே பாயும்: மோடியை சந்திக்கும் முன் டிரம்ப் கருத்து

அடுத்த கட்டுரையில்
Show comments