Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலைய விட இதுதான் அதிர்ச்சியா இருக்கு! – விலையேறிய பூக்கள்!

Webdunia
ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (09:34 IST)
கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளபோது ஆடி மாதம் என்பதால் பூக்களில் விலை அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்டு 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தளர்வுகளின் காரணமாக கிராமப் பகுதிகளில் உள்ள சிறு கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்சமயம் ஆடி மாதம் என்பதால் தொடர் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருவதால் பூக்களின், வரத்தும் விலையும் அதிகரித்துள்ளன.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள கோவில்கள் மற்றும் முக்கிய கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது, என்றாலும் முக்கிய பூஜைகள் செய்யப்பட்டு வருவதால் அங்கும் பூக்கள் வாங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பல இடங்களில் போக்குவரத்து சேவை இல்லாததால் பூக்களுக்கான தேவையும், விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

வழக்கமாக விற்கப்பட்ட விலைகளை தாண்டி மல்லிகை பூ கிலோ ரூ.1000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. முல்லை கிலோ ரூ.450 ஆகவும், சம்மங்கி அரலி போன்றவை ரூ.150 ஆகவும் விற்பனையாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments