மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

Siva
வெள்ளி, 15 நவம்பர் 2024 (07:35 IST)
நாகை - இலங்கை இடையிலான கப்பல் ஏற்கனவே இரண்டு முறை நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மற்றும் இலங்கை காங்கேசன்துறை இடையே ஆகஸ்ட் 16ஆம் தேதி கப்பல் சேவை தொடங்கப்பட்டது. இதனை அடுத்து, போதிய பயணிகள் இல்லாததால் இந்த கப்பல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இதன் பின்னர் சமீபத்தில் மீண்டும் கப்பல் சேவை தொடங்கிய நிலையில், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இயக்கப்படும் என்றும், அதன்படி செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் இயக்கப்பட்டது. இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, செப்டம்பர் 29 முதல் சனிக்கிழமைகளிலும் கூடுதலாக இந்த கப்பல் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வானிலை காரணமாக இலங்கை மற்றும் நாகை இடையிலான கப்பல் சேவை நவம்பர் 19ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் காங்கேசன்துறை ஆகிய இரு பகுதிகளின் பயணிகள் வசதிக்காக நவம்பர் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நான்கு நாட்களும் தொடர்ச்சியாக கப்பல் சேவை இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 18ஆம் தேதி பிறகு, மீண்டும் கப்பல் சேவை வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments