Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மணி நேரத்தில் உருவாகும் ஃபெங்கல் புயல்.. மணிக்கு 13 கிமீ வேகம்! இன்றும் ரெட் அலெர்ட்!

Prasanth Karthick
புதன், 27 நவம்பர் 2024 (08:40 IST)

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைய உள்ள நிலையில் இன்றும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

 

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாகை அருகே கடல்பகுதியில் மையம் கொண்டுள்ளது. இது புயலாக வலுவடைய உள்ள நிலையில் புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட உள்ளது. இதன் காரணமாக நேற்று முதலாகவே தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

 

முக்கியமாக டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றும் பல மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் தொடர்கிறது.

 

தற்போது தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் தொடர்ந்து நகர்ந்து, நாகப்பட்டிணத்தில் இருந்து 400 கிமீ தென் கிழக்கிலும், சென்னையில் இருந்து 590 கி.மீ தெற்கு - தென்கிழக்கிலும் நிலைக் கொண்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாணவர் வேடத்தில் 14 நாட்கள் சட்டவிரோத தங்கிய நபர் கைது! ஐஐடி மும்பையில் அதிர்ச்சி:

மருமகளை மாமனார் பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. மாமியாரும் உடந்தை.. கொலை வழக்கில் திடீர் திருப்பம்..

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு..பரிந்துரையை வாபஸ் பெற்ற மெரெஷ்கோ..!

ஹிரோஷிமா, நாகசாகி போல் ஒரு தாக்குதல்: ஈரான் மீதான தாக்குதல் குறித்து டிரம்ப் சர்ச்சை பேச்சு..!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments