Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மணி நேரத்தில் உருவாகும் ஃபெங்கல் புயல்.. மணிக்கு 13 கிமீ வேகம்! இன்றும் ரெட் அலெர்ட்!

Prasanth Karthick
புதன், 27 நவம்பர் 2024 (08:40 IST)

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைய உள்ள நிலையில் இன்றும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

 

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாகை அருகே கடல்பகுதியில் மையம் கொண்டுள்ளது. இது புயலாக வலுவடைய உள்ள நிலையில் புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட உள்ளது. இதன் காரணமாக நேற்று முதலாகவே தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

 

முக்கியமாக டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றும் பல மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் தொடர்கிறது.

 

தற்போது தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் தொடர்ந்து நகர்ந்து, நாகப்பட்டிணத்தில் இருந்து 400 கிமீ தென் கிழக்கிலும், சென்னையில் இருந்து 590 கி.மீ தெற்கு - தென்கிழக்கிலும் நிலைக் கொண்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments