Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்றி உத்தரவு!

Advertiesment
Tamilnadu
, ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (13:06 IST)
சென்னையில் ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட வழக்கு குறித்த விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப் கடந்த நவம்பர் 8ம் தேதி ஐஐடி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மாநில அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர் சங்கத்தினர் இதுகுறித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த கோட்டூர்புரம் காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். ஆனால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என ஃபாத்திமாவின் தந்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்திருந்தார். காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்!