Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபோதையில் மருமகளிடம் ரவுசு : மகனை குத்திக்கொன்ற தந்தை

Webdunia
புதன், 29 மே 2019 (16:20 IST)
குன்றத்தூர் திருவள்ளுவர் நகரில் உள்ள, மாணிக்கவாசகர்  தெருவில் வசித்துவந்தவர்  பாண்டியன் (69). இவருக்கு நாகராஜ் (27)என்ற மகன் இருந்தார் . இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்துவந்தார்.இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார்.
சம்பவ நாளன்று மதுகுடித்துவிட்டு வந்து மனைவி தீபாவிடம் தகராறு செய்துள்ளார் நாகராஜ். இதைத் தடுக்க முற்பட்டார் தந்தை பாண்டியன்.  ஆனால் தந்தையைப் பொருட்படுத்தாமால் மீண்டும் தகாத வார்த்தைகளைப் பேசி அக்கம் பக்கத்தில் இருப்போருக்கு இடைஞ்சல் தரும் வகையில் வாக்குவாதம் செய்துள்ளார் நாகராஜ்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ், கோபாவேசத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து பெற்ற மகன் என்று கூட பார்க்காமல் நாகராஜின் வயிற்றில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜ்  ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
 
பின்னர் நாகராஜை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் மகனைக்கொன்ற பாண்டியனைக் கைது செய்து விசாரித்துவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments