Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபோதையில் மருமகளிடம் ரவுசு : மகனை குத்திக்கொன்ற தந்தை

Webdunia
புதன், 29 மே 2019 (16:20 IST)
குன்றத்தூர் திருவள்ளுவர் நகரில் உள்ள, மாணிக்கவாசகர்  தெருவில் வசித்துவந்தவர்  பாண்டியன் (69). இவருக்கு நாகராஜ் (27)என்ற மகன் இருந்தார் . இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்துவந்தார்.இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார்.
சம்பவ நாளன்று மதுகுடித்துவிட்டு வந்து மனைவி தீபாவிடம் தகராறு செய்துள்ளார் நாகராஜ். இதைத் தடுக்க முற்பட்டார் தந்தை பாண்டியன்.  ஆனால் தந்தையைப் பொருட்படுத்தாமால் மீண்டும் தகாத வார்த்தைகளைப் பேசி அக்கம் பக்கத்தில் இருப்போருக்கு இடைஞ்சல் தரும் வகையில் வாக்குவாதம் செய்துள்ளார் நாகராஜ்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ், கோபாவேசத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து பெற்ற மகன் என்று கூட பார்க்காமல் நாகராஜின் வயிற்றில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜ்  ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
 
பின்னர் நாகராஜை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் மகனைக்கொன்ற பாண்டியனைக் கைது செய்து விசாரித்துவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments