Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சண்டையை தடுக்க சென்ற தந்தை திடீர் மரணம்; பதறிப்போன மகன்

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (15:38 IST)
திருவரூர் மாவட்டத்தில் சண்டைப் போட்டுக்கொண்டிருந்தவர்களை தடுக்கச் சென்ற தந்தை மயங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

 
திருவாரூர் மாவட்டம், காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் இராமையன்(70).  இவரது மகன் இளையராஜா(3) ஆசைத்தம்பி (37) என்பவருடன் சண்டைபோட்டுக் கொண்டனர். இதைக்கண்ட இராமையன் இருவரையும் தடுத்த நிறுத்த முயன்றார். 
 
இராமையனை சண்டை போட்டுக்கொண்டிருந்த இருவரும் கீழே தள்ளிவிட்டனர். இதனால் இராமையனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்து கீழே விழுந்தார். 
 
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் இராமையன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
சண்டையை சமாதானப்படுத்த முயன்ற தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments