Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடியால் கெட்ட குடும்பம்: தந்தையே மகனை கொன்ற சோகம்!

குடியால் கெட்ட குடும்பம்: தந்தையே மகனை கொன்ற சோகம்!

குடியால் கெட்ட குடும்பம்: தந்தையே மகனை கொன்ற சோகம்!
, சனி, 3 செப்டம்பர் 2016 (09:24 IST)
திருவாரூர் அருகே குடித்துவிட்டு வந்த தந்தை மகனுடன் ஏற்பட்ட தகறாரில் மகனை கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
திருவாரூரில் திலகர் தெருவில் வசிப்பவர் செல்வராஜ். இவர் தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் மற்றும் பொருட்களை விற்று அதில் மது அருந்தியுள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜின் மகன் செல்வகுமார், குடிபோதையில் வீட்டிற்கு வந்த தந்தையிடம் நகை எங்கே என்று கேட்டுள்ளார். இதனையடுத்து தந்தைக்கும், மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
 
இந்த தகராறில் செல்வராஜ் தனது மகன் செல்வகுமாரை கோடாரியால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள செல்வராஜை தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2-ஆம் வகுப்பு மாணவியை பள்ளியில் ஒதுக்கிவைத்த ஆசிரியர்!