Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை! – அந்தியூரில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 28 மே 2020 (08:44 IST)
ஈரோடு மாவட்டத்தில் பிறந்து 2 மாதங்களே ஆன பெண் குழந்தையை அதன் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் துளசிமாதன். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி ஒரு பெண் குழந்தையும் பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாகி விட்ட நிலையில் மகளிர் குழுவிற்கு பணம் செலுத்த சென்றுள்ளார் துளசிமாதனின் மனைவி. இதனால் குழந்தையை கணவரிடம் கொடுத்து பார்த்துக் கொள்ள சொல்லியிருக்கிறார்.

அவரது மனைவி குழுவிற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது பச்சிளம் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருந்திருக்கிறார் துளசிமாதன். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி உடனடியாக குழந்தையை அவரிடமிருந்து பறித்துக் கோண்டு காவல் நிலையத்திற்கு ஓடியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து துளசிமாதனிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொள்ளவே அவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்தியூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சேராத இடம்தனில் சேர்ந்து தீராத பழிக்கு உள்ளான எடப்பாடியார்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு!

முன்னாள் பிரதமர் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலிய வழக்கு: சாகும் வரை சிறை என தீர்ப்பு..!

என்னுடைய பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லை: தேஜஸ்வி யாதவ் அதிர்ச்சி தகவல்..!

திருமண செய்ய மறுத்ததால் பெண் வீட்டிற்கு தீ வைத்த நபர்.. 3 பேர் தீக்காயம் ஒருவர் கவலைக்கிடம்..!

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்