Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழப்பு: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம்

மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழப்பு: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம்
, புதன், 6 நவம்பர் 2019 (09:52 IST)
புதுக்கோட்டை மாவட்டம் அரையப்பட்டி என்ற பகுதியில் மகன் இறந்த அதிர்ச்சியில் கதறி அழுத தந்தையும் திடீரென உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
 
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி என்ற பகுதியை சேர்ந்தவர் 75 வயது ஆறுமுகம். இவர் தனது மகன் ராஜாங்கம் மீது அதீத பாசம் வைத்திருந்தார். 46 வயது ராஜாங்கத்துக்கு திருமணமாகி 5 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இவர்களில் 3 மகள்களுக்கு திருமணமாகிவிட்டதாக தெரிகிறது. காய்கறி வியாபாரம் செய்து வரும் ராஜாங்கம் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் நேற்று மீண்டும் வயிற்றுவலி காரணமாக ராஜாங்கம் வலியால் துடிக்க உடனே அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். ஆனால் ராஜாங்கம் மருத்துவமனையில் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து ராஜாங்கத்தின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. மகன் ராஜாங்கம் உயிரிழந்த செய்தியை கேட்ட ஆறுமுகம், மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அடுத்த விநாடியே மகனின் உடல்மீதே சரிந்து விழுந்து உயிரிழந்தார். 
 
மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அந்தக் கிராமத்தினரையே சோகத்தில் ஆழ்த்தியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாட்டுப்பாலில் தங்கம் உள்ளது – பாஜக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு !