Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தரங்க புகைப்படம்... கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறித்த தந்தை - மகன்..!

Mahendran
புதன், 13 நவம்பர் 2024 (10:26 IST)
23 வயது கல்லூரி மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று கூறி தந்தை, மகன் ஆகிய இருவரும் சேர்ந்து மிரட்டி பணம் பறித்த நிலையில், தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையை சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவர் ஒருவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வந்தபோது, Instagram மூலம் 27 வயது சுதீப் என்ற இளைஞர் உடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது தனது அந்தரங்க புகைப்படங்களை பதிவு செய்து வைத்து, பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.

சுஜித் மட்டும் அல்லாமல், சுஜித்தின் தந்தையும் சேர்ந்து 50,000 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டிய நிலையில், இதுகுறித்து கல்லூரி மாணவி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரில் உண்மை என்று விசாரணையில் தெரியவந்துள்ளதை அடுத்து, சுஜித் மற்றும் அவரது தந்தை வின்சென்ட் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிளஸ் 2 மட்டுமே படித்த சுஜித், பணம் வசூலிக்கும் ஏஜென்ட் ஆகவும், மாவு கடை ஒன்றிலும் வேலை பார்த்த நிலையில், Instagramல் பழக்கமான கல்லூரி மாணவியை மிரட்டியுள்ளார். அவரது தந்தையும் சேர்ந்து மிரட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments