Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டவாளத்தில் சமையல் செய்து விவசாயிகள் போராட்டம்

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2016 (12:22 IST)
காவிரி மேலாண்மை அமைக்க கோரி தஞ்சையில் விவசாயிகள் ரயில் தண்டவாளத்தில் சமையல் செய்து போராட்டம் நடத்தினர்.
 

 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், தேவையான நீரை காவிரியில் திறந்துவிட வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் விவசாயிகள் 48 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
 
இப்போராட்டத்திற்கு மக்கள் நலக்கூட்டு இயக்க அங்கங்களான மறுமலர்ச்சி திமு கழகம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்து பங்கேற்கின்றன.
 
ஆனால், ஆளும் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் இந்தப் போராட்டத்தில் பெங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை முதல் தொடங்கிய இந்த ரயில் மறியல் போராட்டம் நாளை வரை, அதாவது 48 மணி நேரம் நடைபெறுகிறது.
 
தமிழகத்தின் பல முக்கிய ரயில் நிலையங்களில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, தஞ்சை அருகே விவசாயிகள் தண்டவாளத்தில் சமையல் செய்து போராட்டம் நடத்தினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments