Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிணற்றில் தண்ணீர் வராததால் சோகம்..! தற்கொலை செய்து கொண்ட விவசாயி!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (13:38 IST)
ஈரோட்டில் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வராததால் விவசாயி ஒருவர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சென்னியப்பன். 71 வயதான இவர் தனது தோட்டத்தில் பல இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைத்துள்ளார். ஆனால் எதிலும் தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியாமல் தவித்துள்ளார்.

இதனால் கடந்த சில காலமாகவே விரக்தியில் இருந்து வந்த அவர் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது அருந்தியதுடன் தென்னை மரங்களுக்கு வைக்கும் சல்பாஸ் விஷ மாத்திரையையும் உட்கொண்டுள்ளார்.

இதுகுறித்து தாமதமாகவே சென்னியப்பன் தன் மகனிடம் கூற உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அமைச்சர்கள் சிறைக்கு போயும் ராஜினாமா பண்ணல! இந்த சட்டம் அவசியம்! - அமித்ஷா தாக்கு!

கர்ப்பிணி மனைவியை கண்டந்துண்டமாய் வெட்டிய காதல் கணவன்! - தெலுங்கானாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

டிராபிக் போலீஸ் மீது மோதிய கார்.. 100 மீட்டர் தூரத்தில் விழுந்த பரிதாபம்.. மருத்துவமனையில் கவலைக்கிடம்..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு: குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்..!

தன்னை மதிக்காமல் திருமணம்! மனைவி, மகனுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்! - நெல்லையில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments