Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் முழுவதும் நடுக்கடலில் மிதந்த 4 மீனவர்கள்! – காப்பாற்றிய சக மீனவர்கள்!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (13:17 IST)
புதுக்கோட்டை மணல்மேல்குடியை சேர்ந்த மீனவர்கள் 4 பேர் கடலில் மாயமான நிலையில் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பொன்னகரத்தை சேர்ந்த மீனவர்கள் 4 பேர் நாட்களுக்கு முன்பு கடலில் விரிக்கப்பட்ட நண்டு வலையை எடுக்க புறப்பட்டு சென்றுள்ளனர்.

மாலை கரைதிரும்ப வேண்டியவர்கள் திரும்பாததால் உறவினர்கள் கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் 2 படகுகளில் கடலுக்கு சென்று தேடியுள்ளனர். நேற்று முழுவதும் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் கடலோர காவல்படை மற்றும் மீனவர்கள் பலர் 20 நாட்டுப்படகுகளில் கடலுக்கு சென்று தேடியபோது கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் நான்கு பேரையும் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

நால்வரும் நண்டு வலை எடுத்துக் கொண்டிருந்தபோது காற்றின் வேகம் அதிகரித்ததால் படகோடு இழுத்து செல்லப்பட்டதாகவும், பின்னர் படகு உடைந்ததால் தண்ணீரில் இரவு முழுவதும் தத்தளித்ததாகவும் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments