Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 12 மணி நேரத்தில்... ஃபானி புயலில் இருந்து தப்புமா வட தமிழகம்..?

Webdunia
சனி, 27 ஏப்ரல் 2019 (10:05 IST)
இன்னும் 12 மணி நேரத்தில் ஃபானி புயல் உருவாகி, வரும் 30 ஆம் தேதி மாலை வட தமிழகம் - தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனால் கனமழை இருக்ககூடும் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. 
 
சென்னையில் இருந்து 1,210 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த மண்டலம் ஏப்ரல் 30 ஆம் தேதி வட தமிழகம் நோக்கி புயலாக வரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
அதாவது, தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ் மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் ஃபானி புயலாக வலுப்பெறுகிறது. இதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஃபானி புயல் 30 ஆம் தேதி மாலை வட தமிழகம் - தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையல் அறிவிப்பை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments