Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேன்சி ஸ்டோரில் ரகசிய அறை அமைத்து கள்ள நோட்டு அச்சடிப்பு: மேட்ட்ரில் 3 பேர் கைது..!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (11:54 IST)
வெளியே பேன்சி ஸ்டோர் வைத்து உள்ளே கள்ள நோட்டு அச்சடித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 
 
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் பேன்சி ஸ்டோர் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் வேலை செய்யும் அண்ணாதுரை என்பவர் கோழி வாங்க சென்றுள்ளார். அப்போது அவர் கொடுத்த ஐநூறு ரூபாய் நோட்டு சற்று வித்தியாசமாக இருந்ததை அடுத்து கோழிக்கடைக்காரர் சந்தேகம் அடைந்து காவல்துறையினர்களிடம் அவரை பிடித்து கொடுத்தார் 
 
காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்தபோதுதான் பேன்சி ஸ்டோரில் கள்ள நோட்டு அச்சடிப்பதற்கு தனி அறை உள்ளது என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து பேன்சி ஸ்டோரைஉ சோதனை செய்தபோது கலர் பிரிண்டர் செல்போன்  உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 
 
இந்த கடையின் உரிமையாளர் உரிமையாளருக்கு கடன் இருப்பதால் அந்த கடனுக்காக தனி அறை அமைத்து கள்ள நோட்டை தயார் செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அந்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments