போலி என்.சி.சி. பயிற்சியாளரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்: சமூக நலத்துறை செயலாளர்

Mahendran
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (14:01 IST)
போலி என்.சி.சி. பயிற்சியாளரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என     சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தெரிவித்துள்ளார்.

சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பள்ளி மாணவிகள் மீதான பாலியல் தொல்லை விவகாரத்தில் விசாரணை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பல்நோக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் போலி என்சிசி பயிற்சி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி சுற்றுலா மாளிகையில்  ஆஜராகி இன்று இரவு 7 மணிக்குள் மாணவிகள் அல்லது அவர்களின் பெற்றோர் புகார் தரலாம் என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து சிவராமனால் மேலும் சில மாணவிகள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் புகார் அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த போலி என்.சி.சி. பயிற்சியாளர் சிவராமன் மீது மேலும் ஒரு பாலியல்  வழக்குப்பதிவு  செய்திருப்பதாக ஐஜி பவானீஸ்வரி தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்