தீபா வீட்டில் நுழைந்த போலி அதிகாரி போலீசில் சரண்

Webdunia
திங்கள், 12 பிப்ரவரி 2018 (05:00 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டில் வருமான வரி சோதனை செய்யும் அதிகாரி போல் ஒருவர் நடித்தார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரணை செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்த மர்ம நபர் சுவரேறி குதித்து தப்பிவிட்டார்

இந்த நிலையில் தீபா வீட்டில் நுழைந்த போலி அதிகாரியை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு சல்லடை போட்டு தேடப்பட்டது. இந்த நிலையில் ஜெ.தீபா வீட்டில் நுழைந்த போலி வருமானவரித்துறை அதிகாரி நேற்றிரவு சரணடைந்தார்.

மாம்பலம் காவல் நிலையத்தில் சரண் அடைந்த அந்த போலி ஐ.டி அதிகாரியின் உண்மையான பெயர் பிரபு என்றும், அவரிடம் மேலும் மாம்பலம் காவல்நிலையத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments