Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்த போலி மருத்துவர் கைது!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (13:20 IST)
கோவையில் ஹோமியோபதி மருத்துவர் எனக்கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த நாகர்கோவிலை சேர்ந்த ஹரேந்திரன் @ எர்வின் எவின்ஸ்  என்பவர் கேரள போலீசாரால்  கைது. 
 
அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ஒருபுறம் மட்டும் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000  ரூபாய் நோட்டுகள், போலி தங்க பிஸ்கட்,ரப்பர் ஸ்டாம்ப், ஏர் கன் துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் போத்தனூர் போலீசாரால் பறிமுதல்  
 
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் தலையோலப்பறம்பு காவல் நிலையத்தில் எர்வின் எவின்ஸ் மீது  உள்ள வழக்கு தொடர்பாக கேரள போலீசார் எர்வின் எவின்ஸ்யை திருப்பூரில் கைது செய்தனர்.
 
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கோவை வெள்ளலூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது.
 
இதுகுறித்து கேரள போலீசார் அளித்த தகவலின் பெயரில் எர்வின் எவின்ஸ் தங்கி இருந்த வீட்டை கோவை போத்தனூர் போலீசார் சோதனையிட்டனர்.
 
சோதனையில் போலி தங்க கட்டி ,போலி ரூபாய் நோட்டுகள் போன்றவை வீட்டில் இருந்ததால் வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் புகாரை பெற்று எர்வின் எவின்ஸ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments