Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வர், உதயநிதியை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி வீரர் மீது வழக்குப்பதிவு..!

முதல்வர், உதயநிதியை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி வீரர் மீது வழக்குப்பதிவு..!
, வியாழன், 27 ஏப்ரல் 2023 (07:56 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் கேப்டன் என்று கூறிக்கொண்டு கோப்பையை வென்றதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டவர் மாற்றுத்திறனாளி வினோத் பாபு. 
 
இதனை அடுத்து சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி என்பதை ஒன்று நடைபெறவில்லை என்பதும் கடையில் வாங்கிய கோப்பையை காட்டி முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஏமாற்றியதாகவும் பின்னர் தெரியவந்தது. 
 
இதனை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்களை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி வினோத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பேக்கரி உரிமையாளர்களிடம் இருந்து ஒரு லட்சம் பெற்று ஏமாற்றிய புகாரில் வினோத்குமார் மீது இராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மதுபானக்கூடம் சேப்பாக்கம் விளையாட்டு மைதானம்:- அன்புமணி ராமதாஸ்