Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
செவ்வாய், 10 ஜூன் 2025 (11:21 IST)
ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் பொது மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய சத்து மாத்திரை உள்பட சில மாத்திரைகள், திருப்பூர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டதாகவும், இவை 200 கிலோ இருந்ததாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
திருப்பூரில் உள்ள வாய்க்கால் ஒன்றில், 200 கிலோ மாத்திரைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இது குறித்து நடந்த விசாரணையில், அந்த மாத்திரைகள் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இரும்புச்சத்து, போலிக் ஆசிட் சத்து மாத்திரைகள் என்று தெரியவந்துள்ளது.
 
இவை அனைத்தும் 2024 ஆம் ஆண்டு காலாவதியாகிவிட்டதாகவும், இதனை அடுத்து வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார நலப் பணிகள் துறை இணை மற்றும் துணை இயக்குநர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
மேலும், இந்த மாத்திரை கொட்டப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய மாத்திரைகளை காலாவதி ஆகும் வரை வழங்காமல், வாய்க்காலில் கொட்டி இருப்பது மனிதாபிமற்ற செயல் என, இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments