Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கடும் ஊரடங்கு உத்தரவா...?

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (10:00 IST)
3 ஆம் அலைக்கான கணிக்கப்பட்ட காலமும் நெருங்குவதால் மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். 
 
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தில் 1,592 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,592 பேர்களில் 165 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது. ஆம், தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு ஆகிய நகரங்களில் பாதிப்பு முன்பை விடவும் அதிகரித்து வருகிறது. 
 
எனவே, மூன்றாம் அலைக்கான கணிக்கப்பட்ட காலமும் நெருங்குவதால் மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், உடல் வலி, சோர்வு உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகள் தெரிந்தால், மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments