Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில்பட்டி முன்னாள் எம் எல் ஏ காலமானார் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வருத்தம்!

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (10:26 IST)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரான முன்னாள் எம் எல் ஏ அய்யலுசாமி வயது மூப்புக் காரணமாக மறைந்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான அய்யலுசாமி, நில அடமான வங்கியின் கூட்டுறவு தலைவர் , பெருமாள்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் , தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எனப் பல பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். மேலும் 1996 முதல் 2001 ஆகிய ஆண்டுகளில் கோவில்பட்டி தொகுதிக்கு எம் எல் ஏ வாகவும் இருந்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக சொந்த ஊரான பெருமாள் பட்டியில் உள்ள வீட்டில் அதிகாலையில் இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments