Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு.. வாக்காளர்கள் கடும் அதிருப்தி..!

Siva
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (07:39 IST)
தமிழக முழுவதும் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்கு பதிவு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக அங்கு வாக்களிக்க வந்த வாக்காளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் இன்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நாகையில் உள்ள 153வது  வாக்கு சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது.

காலை 7 மணி முதல் வாக்களிக்க ஏராளமான வாக்காளர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு என்று தேர்தல் அதிகாரிகள் கூறியது வாக்காளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து இன்னும் சிறிது நேரத்தில் கோளாறு சரி செய்து வாக்கு பதிவு தொடங்கும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறினாலும் வாக்காளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ: கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பயணிகள் திடீர் போராட்டம்: தேர்தல் நாளில் இப்படி ஒரு அதிருப்தியா?

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments