Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு.. வாக்காளர்கள் கடும் அதிருப்தி..!

Siva
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (07:39 IST)
தமிழக முழுவதும் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்கு பதிவு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக அங்கு வாக்களிக்க வந்த வாக்காளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் இன்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நாகையில் உள்ள 153வது  வாக்கு சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது.

காலை 7 மணி முதல் வாக்களிக்க ஏராளமான வாக்காளர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு என்று தேர்தல் அதிகாரிகள் கூறியது வாக்காளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து இன்னும் சிறிது நேரத்தில் கோளாறு சரி செய்து வாக்கு பதிவு தொடங்கும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறினாலும் வாக்காளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ: கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பயணிகள் திடீர் போராட்டம்: தேர்தல் நாளில் இப்படி ஒரு அதிருப்தியா?

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments