Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்க கூட்டணி கட்சிக்கு கூட பாதுகாப்பு இல்லையா? – திமுகவிற்கு எடப்பாடியார் கண்டனம்!

Webdunia
சனி, 28 அக்டோபர் 2023 (16:09 IST)
சென்னையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது நடந்த தாக்குதலுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.



சமீபத்தில் தமிழ்நாடு ஆளுனரின் ராஜ்பவன் இல்லத்தில் மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அடுத்ததாக சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது மர்ம கும்பல் நடத்திய தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சி அலுவலகங்கள், அரசு முக்கியஸ்தர்கள் இடங்களின் மீது நடந்து வரும் இந்த தாக்குதல்கள் குறித்து ஆளும் திமுக அரசிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது நடந்த தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை ஒரு கட்சி அலுவலகம் மீது, அதுவும் திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி அலுவலகம் மீதே தாக்குதல் நடந்திருக்கிறது. யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பதை தினம் ஒரு சம்பவம் நிரூபிக்கிறது.

நான் ஏற்கனவே சொன்னதுபோல இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கி கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது நடந்த தாக்குதல் குறித்து அரசு உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்யவேண்டும்” என பேசியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments