Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி பற்றி துதி பாடுவது தான் எனது வேலையா? கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆவேசம்..!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (12:27 IST)
உதயநிதி பற்றி துதி பாடுவது தான் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வேலை என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டிய நிலையில் இதுகுறித்து கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேட்டியில் கூறியதாவது:
 
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை திருச்செங்கோட்டில் பாதயாத்திரை மேற்கொண்ட போது, திருச்செங்கோடு தொகுதியில் எனது செயல்பாடுகள் ஒன்றும் இல்லை என பேசியுள்ளார்.  சட்டமன்றத்தில் அமைச்சர் உதயநிதி பற்றி துதி பாடுவது தான் எனது வழக்கம் என பேசியுள்ளார்
 
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆதாரத்துடன் பேச வேண்டும். இரண்டரை ஆண்டில் சட்டமன்றத்தில் நான் அமைச்சர் உதயநிதி பற்றி பேசியிருந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.  எனது செயல்பாடு பற்றி பேசுவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.  எதோ குறை சொல்ல வேண்டும் என பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
 
எனது தொகுதிக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் சட்டமன்றத்தில் நான் பேசியுள்ளேன். இதுகுறித்து அண்ணாமலை என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?  எங்கே, எப்போது என ஊடகங்கள் முன்னிலையில் சொல்ல வேண்டும். இல்லையென்றால் நான் பேசியது தவறு என அண்ணாமலை ஒட்புக் கொள்ள வேண்டும். ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் இவ்வாறு பேசுவது அழகு இல்லை" என  நாமக்கல்லில் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ பேட்டி அளித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments