Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கு எங்களுடைய தொகுதி.. கே.எஸ்.அழகிரி பேட்டி!

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (13:55 IST)
ஈரோடு கிழக்கு தொகுதி எங்கள் தொகுதி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி உள்ளன. 
 
திமுக கூட்டணியை பொறுத்தவரை அந்த தொகுதி காங்கிரஸ் கட்சியின் தொகுதி என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் அந்த தொகுதியை வெல்ல வேண்டும் என்பதற்காக பெரும் முயற்சி செய்யும் என்பதால் அதற்கு ஈடு கொடுக்க திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற குரலும் எழுப்பப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி எங்கள் தொகுதி என்றும் நாங்கள் வெற்றி பெற்ற தொகுதி என்றும் எங்கள் கட்சியின் வேட்பாளர் தான் அங்கு போட்டியிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - வங்கதேசம் இடையே முக்கிய பொருட்கள் இறக்குமதிக்குத் தடை.. அதிரடி உத்தரவு.

ராகுல் காந்தியின் செய்தி தொடர்பாளராக மாறிய முதல்வர் ஸ்டாலின்: குஷ்பு கடும் விமர்சனம்

மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி கேள்வி..!

மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்ப்போம்: விஜய்

ஆசிரியர் தகுதி தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments