Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈரோடு கிழக்கு தொகுதி: திமுகவின் அதிரடி அறிவிப்பு

dmk
, வியாழன், 19 ஜனவரி 2023 (20:37 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக தமிழக காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் 
 
2021 ஆம் ஆண்டு தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த தொகுதி தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மறைந்த எம்எல்ஏ தமிழ்மகன் ஈவேராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு