Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் விரைவில் மாமியார் வீட்டிற்கு செல்வார் - எடப்பாடி பழனிச்சாமி அதிரடி

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2017 (09:45 IST)
டிடிவி தினகரன் விரைவில் சிறைக்கு செல்வார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.


 

 
சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகர்ன் “ இன்னும் ஒரு வாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியையும், ஓ.பி.எஸ்-ஸையும் வீட்டிற்கு அனுப்பி விடுவோம்” எனக் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் பழனிச்சாமி “ எடப்பாடி தொகுதியில் 9 முறை போட்டியிட்ட எனக்கு ஒரு முறை கூட பிரச்சாரம் செய்ய தினகரன் வந்ததில்லை. ஒரு நாளில் கட்சியில் சேர்ந்து துணை பொதுச்செயலாளர் பதவியை பெற்றவர் அவர். தற்போது ஆட்சியை கவிழ்ப்பதற்காக திமுகவுடன் கூட்டு சேர்ந்து நாடகம் ஆடுகிறார். நாங்கள் வேலை முடிந்தால் வீட்டிற்கு செல்வோம். ஆனால், தினகரன் விரைவில் மாமியார் வீட்டிற்கு செல்ல இருக்கிறார். அது என்ன மாதிரியான மாமியார் வீடு என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
 
எம்.எல்.ஏக்களை அவர் சிறை வைத்திருக்கிறார். அவர்களை வெளியே விட்டால் எங்கள் அணியை தேடித்தான் அவர்கள்  வருவார்கள். அதிமுகவையும், ஆட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்கிற சசிகலா குடும்பத்தினருக்கு அனைத்து கதவுகளும் முடப்பட்டு விட்டன” என அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments